Header Ads



முஸ்லிம் சமூ­கத்­துக்­கென நிர்­மா­ணிக்­கப்­பட்ட 9 மாடி கட்­டி­டத்தை சுவீ­க­ரிக்கவுள்ள புத்­த­சா­சன அமைச்சு


(ஏ.ஆர்.ஏ.பரீல்)


முஸ்லிம் சமூ­கத்­துக்­கென நிர்­மா­ணிக்­கப்­பட்டு தற்­போது முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் இயங்­கி­வரும் 9 மாடி கட்­டி­டத்தை சுவீ­க­ரிக்கும் நட­வ­டிக்­கை­களை புத்­த­சா­சன மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சு முன்­னெ­டுத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.


கடந்த வருட ஆரம்­பத்தில் கட்­டி­டத்தை புத்­த­சா­சன அமைச்சு கையேற்­ப­தற்கு அனு­மதி பெறப்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கி­றது. இந்த 9 மாடி கட்­டி­டத்தை பொறுப்­பேற்று அங்கு இந்து விவ­கார, மற்றும் கிறிஸ்­தவ விவ­கார திணைக்­க­ளங்­களை இட­மாற்றத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.


இக்­கட்­டித்தில் மூன்று மாடி­களை தற்­போது முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் பயன்­ப­டுத்தி வரும் நிலையில் ஏனைய மாடிகள் பூர­ணப்­ப­டுத்­தப்­ப­டாத நிலையில் காணப்­ப­டு­கின்­றன.


ரயில்வே திணைக்­க­ளத்­துக்கு சொந்­த­மான தற்­போது முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் இயங்­கி­வரும் கட்­டிட காணி நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பை­யினால் கையேற்­கப்­பட்டு வழங்­கப்­பட்­ட­தாகும். இந்தக் கட்­டித்­துக்­கான உறுதி முஸ்லிம் பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு மாற்றம் செய்­வ­தற்­கான இறுதி கட்­டத்தில் உள்ள நிலை­யிலே புத்­த­சா­சன அமைச்­சினால் இந்த அதி­ரடி நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.


மூன்று மாடிகள் தவிர்ந்த ஏனைய மாடி­களின் சாவிக் கொத்­து­களை திருப்பி கைய­ளிக்­கு­மாறு கோரப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.


இக்­கட்­டிடம் முஸ்லிம் சமூ­கத்தின் சொத்தாகும். தற்­போது பூர­ணப்­ப­டுத்­தப்­ப­டா­துள்ள மாடி­களில் தற்­போது இட நெருக்­க­டியில் சிக்­கித்­த­விக்கும் காதிகள் மேன்­மு­றை­யீட்டு சபையை இங்கு இட­மாற்ற முடியும். மற்றும் ஹஜ் முக­வர்கள் சங்­கத்­துக்கும், முஸ்லிம் சமூ­க­நல இயக்­கங்­க­ளுக்கும் வாட­கைக்கு விட­மு­டியும்.


இவ்­வி­வ­காரம் தொடர்பில் முஸ்லிம் அமைச்­சர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தலை­யிட்டு கட்­டி­டத்தை பாது­காப்­ப­தற்கு செயலில் இறங்க வேண்டும். தற்போதைய அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க முஸ்லிம் சமூகத்துடன் நெருக்கிய தொடர்புகளைப் பேணுபவர். அவர் இதுவிடயம் தொடர்பில் மீள்பரீசீலனை செய்ய வேண்டுமென முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. – Vidivelli

2 comments:

  1. ஊழல் நிறைந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் முஸ்லிம் சிவில் சமூகத் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்களையும், சமூகத் தலைவர்களையும் எப்பொழுதும் இந்த பத்திகளில் புகழ்ந்தும், பாதுகாக்கும் பத்திரிகையாளராகவும் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் இந்த வலைத்தளத்தில் அல்லது விடிவெள்ளி முஸ்லீம் சமூகத்தின் "ரியாலிட்டி பிரச்சினை அல்லது பிரச்சினைகள்" பற்றி நீங்கள் பேசவில்லை அல்லது எழுதியதில்லை. இந்த அரசியல்வாதிகள் மற்றும் சமூகத் தலைவர்கள் / மசூதி அறங்காவலர்கள் என்று அழைக்கப்படுபவர்களிடையே மிகப்பெரிய பிரச்சினை ஊழல் மற்றும் மோசடி ஆகும்.
    காலஞ்சென்ற கௌரவ எம்.எச்.மொஹமட் அவர்களினால் போக்குவரத்து அமைச்சராக இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்றிட்டத்தின் ஆரம்பத்திலிருந்து இதுவரைபல மில்லியன் $ / மில்லியன் கணக்கான ரூபா பணம் இப்போது வரை செலவழிக்கப்பட்டுள்ளது.
    சமீபத்தில் முஸ்லீம் அதிகாரிகளால் செலவழிக்கப்பட்ட திட்டச் செலவு மதிப்பிடப்பட்ட தொகையை விட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகம் என்றும், பெறப்பட்ட வெளிநாட்டு நிதிகள் கணக்கிடப்படவில்லை என்றும் கருதினர். எனவே நீங்கள் ஏன் இந்த உண்மைகளைப் பற்றி எழுதவில்லை மற்றும் இந்த ஊழல்களில் ஈடுபட்ட முஸ்லீம் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஊழலை அம்பலப்படுத்தவில்லை. நீங்கள் இப்போது சில பெளத்த அமைச்சர்கள் இந்த கட்டிடத்தை எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் பற்றி எழுதுகிறீர்கள் மேற்குறிப்பிட்ட விடயங்களைப் பற்றி தமது (பௌத்த) அமைச்சின் பாவனைக்காக கட்டிடத்தை எடுத்துச் செல்வதில் ஆர்வமுள்ள சில அமைச்சு/ அமைச்சரின் விடயம் நாட்டைக் குழப்புவதற்கும், முஸ்லிம்களை உராய்ந்த ஆடுகளாக்குவதற்கும் இத்தகைய வழிகளுக்காக எப்பொழுதும் காத்திருக்கும் வெறித்தனமான கோணலான முஸ்லீம் கும்பல்களைத் தூண்டிவிடுவதன் மூலம் வகுப்புவாத ஒற்றுமையைத் தூண்டிக்க முயற்சிக்கிறீர்களா?
    தயவுசெய்து முதலில் முஸ்லீம் அரசியல் மற்றும் உத்தியோகபூர்வ வட்டாரங்களில் ஊழல் பற்றி எழுத மற்றும் அவர்களை அம்பலப்படுத்த நீங்கள் முயற்சிக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் பின்னர் Allmighty அல்லாஹ் எங்கள் சமூகத்திற்கு தீங்கு செய்ய அனுமதிக்க மாட்டான்.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. சமூகத் துவேசத்தின் மற்றுமோர் அம்சம் தான், அரசாங்கம் வழங்கும் சலுகைகைளைப் பயன்படுத்தி கட்டப்பட்ட கட்டடத்தின் இதுவரை பாவிக்காக பகுதிகளை பிரதான அமைச்சு வேறு அமைச்சின் காரியாலங்களை அமைப்பது அரச மட்டத்தில் எந்தப் பிழையும் இல்லை. அந்தக் கட்டடத்தில் அது முஸ்லிம்களின் சொத்து என எழுதப்பட்டு இல்லை. அரச கட்டடங்கள் அரசின் எந்த உத்தியோகபூர்வமான தேவைகளுக்கும் பாவிக்கலாம். அதனையும் இனத்துவேசத்துக்கு இழுக்கும போக்கு குறுகிய இனவாதச்சிந்தனையாகும். அதனைத்தான் நபியவர்கள் ஒருமுறை' ஒரு ஸஹாபியைப் பார்த்து ' உங்களிடத்திலே ஜாஹிலிய்யாக் கருத்துக்கள் ஊன்றியிருக்கின்றது' எனக்கூறினார்.

    ReplyDelete

Powered by Blogger.