Header Ads



ஜெனீவாவுக்கு பறந்த அலி சப்ரியும், விஜேதாசவும் - ஐ.நா கூட்டத்தொடர் 12 ஆரம்பம்


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் நேற்று ஜெனீவாவிற்கு பயணமாகினர்.


அதன்படி, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நீதி அமைச்சர்  வி​ேஜதாச ராஜபக்‌ஷ, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குறித்த குழுவில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.