Header Ads



ஜனாதிபதி மாளிகையில் நிமல் லான்சா சுகபோகம் - நீர்கொழும்பில் UNP யினர் ஆர்ப்பாட்டம் (வீடியோ)


 - Ismathul Rahuman -

    முன்னால் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா அவரது சகோதரர் நகர பிதா தயான் லான்சா வீடுகளை கொள்ளையடித்து தீவைத்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு நீர்கொழும்பு  மாநகர சபை உறுப்பினரையும் மற்றும் ஒருவரையும் விசாரணைக்காக பொலிஸார் அழைத்துள்ளனர்.

   நீர்கொழும்பு மாநகர சபையின் ஐ.தே.க. உறுப்பினர் சங்கீத் பெரேரா, கட்டுவ பிரதேசத்தையைச் சேர்ந்த பிரதீப் சுரங்க பெர்ணான்டோ ஆகியோர்  நேற்று செவ்வாய்க்கிழமை பகல் சட்டதரணி திஷான் சஹபந்து ஊடாக பொலிஸில் முன்னிலையாகச் சென்றபோது அவர்களை பொறுப்பேற்கவில்லை. நாம் தேவைப்படும் போது அறிவிப்போம் எப்போது வாருங்கள் எனவ தலைமை பொறுப்பதிகாரி ரசிக்க வத்தேகம கூறினார்.

  இவர்கள் பொலிஸில் சரணடைவதற்கு முன்னர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையம் முன்பாக ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


No comments

Powered by Blogger.