Header Ads



அமெரிக்க பல்கலைக்கழகத்தில் (PhD) கற்கையை தொடரவுள்ள அஷ்ஷைக் AJM மக்தூம்


Ihsaniyyah Arabic College இல் 1999 ம் ஆண்டு பட்டம் பெற்று,  Ihsaniyyah Arabic College முன்னால் சிரேஷ்ட விரிவுரையாளரான, அஷ்-ஷைக் ஏ.ஜே.எம். மக்தூம் இஹ்ஸானி அமெரிக்க  பல்கலைக்கழகமொன்றில் கலாநிதி (PhD) கற்கையை தொடர்வதற்கான வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இவர் நாவலபிட்டிய ஜாமியா இஸ்லாமியாவில் மிகவும் குறுகிய காலத்தில், அல்குர் ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்தவர் என்பதோடு, மட்டுமல்லாமல்,  Ihsaniyyah Arabic College கலாசாலையில் இருந்து முதன்முதலில் மதீனா ஜாமிஆ இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியை தொடர்வதற்காக தெரிவுசெய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

 கலைமாணி (BA), முதுமானி (MA) கற்கைகளை நிறைவு செய்த இவர், கபூரிய்யாஹ், பின்பாஸ், நூரிய்யாஹ் அறபு கல்லூரிகளிலும் ஆசிரியராக சேவையாற்றியுள்ளார். 


மேலும், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா, ஷூரா கவுன்சில் போன்ற தேசிய அமைப்புக்களுடன் இனைந்து நாட்டுக்கும், சமூகத்துக்கும் தொடர்ந்தும் பல்வேறு சேவைகளை ஆற்றி வருகிறார்.

இலங்கை மன்னில் முதன்முதலில் அறபு மொழியிலான செய்தி தளமொன்றை (شبكة سيلان الإخبارية) உருவாக்கி தொடர்ந்தும் நிர்வகித்து வருகின்ற பெருமை, அறபு மொழியில் மிகவும் தேர்ச்சி பெற்ற இவரையேச் சாரும். 

தனது கல்வியை கச்சிதமாக நிறைவு செய்து முடித்து, நாட்டுக்கும், சமூகத்துக்கும் தொடர்ந்தும் சேவையாற்ற, எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு பூரன உடல் ஆரோக்கியதை வழங்குவானாக. ஆமீன் யாரப்பல் ஆலமீன்


 Ihsaniyyah Arabic College


No comments

Powered by Blogger.