Header Ads



எதோச்சதிகார ஆட்சியின் அடையாளங்கள் மேலெழுவதை, இன்று எம்மால் காண முடிகிறது - இம்தியாஸ் Mp


 இன்றைய(21) ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்த கருத்துக்களின் சாரம்சம்.


அவசரகாலச் சட்டத்தை இனிமேலும்  கடைப்பிடிக்கப் போவதில்லை என புதிய ஜனாதிபதி அண்மையில் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்திற்குப் பிறகு, 7 மாவட்டங்களுக்கு பாதுகாப்புப் படையினரை பிரசன்னமாக்கும் அதிகாரம் வழங்கி வர்த்தமானி வெளியிடப்பட்டது. இது இரட்டை முக நடத்தை இல்லையா?


புதிய ஜனாதிபதி நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்த போது சர்வதேச நாடுகளிடம் சென்று பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என கூறியிருந்தார். ஆனால் இன்று அவர் என்ன செய்கிறார். கேவலமான முறையில் பல்கலைக்கழக மாணவ தலைவர்களை வேட்டையாடுவதற்கு இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.


பல்கலைக்கழக மாணவ தலைவர்கள் இன்று வேட்டையாடப்படுகிறார்கள். நாளை தொழிற்சங்கங்கள் வேட்டையாடப்படும். நாளை விவசாய அமைப்புகள், மீனவ சங்கங்கள் வேட்டையாடப்படும்.


இந்நாட்டு அப்பாவி மக்கள் தாங்கள் படும் துன்பங்களை நினைத்து கோஷமெழுப்ப முடியாத எதோச்சதிகார ஆட்சியின் அடையாளங்கள் மேலெழுவதை இன்று எம்மால் தெளிவாகக் காண முடிகிறது!


இன்று நம் நாட்டின் அரசியலில் என்ன நடக்கிறது என்பதை பொறுப்புள்ள குடிமக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.


விரைவில் மனித உரிமைகள் ஆணைக்குழு கூடவுள்ளது. அவர்களுக்கு முன் நாம் பதில் சொல்ல வேண்டும். இவை நமது பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் விளைவுகளைப் பாருங்கள். இது ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல, நாட்டின் பொருளாதார நிலையையும் பாதிக்கிறது. ஜி எஸ் பி இழப்பால் நமது நாட்டில் ஏற்ப்பட்ட பொருளாதார பாதிப்பு என்ன வென்று ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள். இவற்றிலிருந்து முறையாக எவ்வாறு விடுபடுவது என்பது குறித்து சிந்திக்க வேண்டுமல்லவா?இவ்வாறு பயணித்து இப்போது இந்நாட்டை எங்கே கொண்டு செல்லப்போகிறோம் என கேள்வி எழுப்பினார்.

No comments

Powered by Blogger.