Header Ads



நீர்கொழும்பு நீதிமன்றம் முன் துப்பாக்கிச்சூடு - நடந்தது என்ன..?


- Ismathul Rahuman - 


   நீர்கொழும்பு நீதிமன்றம் முன்பாக   இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதால உலக உறுப்பினர் உட்பட இருவர் காயமடைந்து நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இன்று புதன்கிழமை பகல்  மணியளவில் இடம்பெற்ற இத் துப்பாக்கி சூட்டில் கட்டுவெல்லேகம சுரேஷ் புஷ்பகுமார எனும் 40  வயது பாதால உலக உறுப்பினரும் வீதியில் சென்ற ஒருவரும் காயமடைந்துள்ளனர்.  

சுரேஷ் என்பவர் நீதிமன்றில் இடம்  பெற்ற வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு காரில் பயணிக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி சூட்டினை நடத்திவிட்டுச் தப்பிச்சென்றுள்ளனர்.

  காரில் காயமடைந்தவரோடு மேலும் இருவர் பயணித்துள்ளனர். இத்துப்பாக்கிச் சூட்டில் வீதியில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரும் காலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

   சுரேஷ் என்பவர் சத்திரசிகிச்சைக்கு உற்படுத்தப்பட்டுள்ளார்.

   துப்பாக்கிச்சூடு நடத்தியவரை  அடையாளம் கண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தனிப்பட்ட கோபத்தினால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கின்றனர்.

நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.