Header Ads



இலங்கைக்கும் ஓமானுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்


விவசாயத்துறையில் ஒத்துழைப்புடன் செயற்படுவது தொடர்பில் இலங்கைக்கும் ஓமானுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.


அதுதொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், விவசாயத் துறையில் ஒத்துழைப்புடன் செயற்படுவது தொடர்பில் இலங்கைக்கும் ஓமானுக்குமிடையில் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான உத்தேச சட்டமூல ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் உறுதிப்பாடு கிடைத்துள்ளது. அதற்கிணங்க மேற்படி உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்காக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


(லோரன்ஸ் செல்வநாயகம்)

No comments

Powered by Blogger.