Header Ads



சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு


அழைப்பின் பேரில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கலந்துரையாடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழு நேற்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடிவு செய்தது.

சர்வகட்சி அரசாங்க வேலைத்திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி விக்கிரமசிங்க ஐக்கிய மக்கள் சக்தி க்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

கட்சியின் தீர்மானத்திற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்டுப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தச் சந்திப்பின் போது அவர்களது முன்மொழிவுகள் குறித்தும் கட்சி விவாதிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.