Header Ads



இஸ்மத் மௌலவி, தானிஷ் அலி நலமாக இருக்கிறார்கள் - பிரார்த்தனை செய்யும்படி கோரிக்கை


இஸ்மத் மௌலவி மற்றும் தானிஷ் அலி ஆகியோர் வெலிக்கடை  சிறைச்சாலையில் நலமாக இருக்கிறார்கள். எல்லோர் பற்றியும் விசாரித்தார்கள். தமக்கு பிரார்த்தனை செய்யும்படி சகலரையும் வேண்டிக் கொண்டார்கள்.

இன்று -02- நானும் சகோதரர் ரஸ்மின் Rasmin MISc அவர்களும் இவர்களை பார்க்க வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றிருந்தோம். இவர்களுக்கான பகல் உணவை சகோ. ரஸ்மின் அவர்கள் வீட்டிலிருந்தே சமைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். தானிஷ் அலியின் தந்தை ஏற்கனவே உள்ளே சென்று வந்ததால் ஒருவருக்கு மாத்திரமே உள்ளே செல்ல முடியும் என பணிக்கப்பட்டதற்கு இணங்க சகோதரர் ரஸ்மின் வெளியே இருந்தார் அனுமதி பெற்று நான் உள்ளே சென்றேன். இஸ்மத் மௌலவி அவர்களை உள்ளே இருக்கின்ற சகலரும் இன மதம் பாராது அன்பாக உபசரிக்கின்றனர். அவருக்கு எந்த ஒரு குறையும் இல்லை என சொன்னார். எதிர் வருகின்ற வெள்ளிக்கிழமை மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுகிறார். அவருடைய விடுதலைக்காக சகலரும் பிரார்த்திக்குமாறு அன்பாய் கேட்டுக்கொள்கிறேன். 

யார் என்ன சொன்ன போதிலும் அவர் சமூகத்திற்காகவே போராட்டத்தில் ஈடுபட்டார். என்றும் எமது ஆதரவும் பிரார்த்தனையும் அவருக்கு இருக்கிறது. அவருடைய குடும்பத்தினரும் நன்றாக இருக்கிறார்கள். அவர்களோடும் எமது குழு தொடர்பிலேயே இருக்கிறது. 

எல்லா புகழும் இறைவனுக்கே!

Sheikh T. Haidar Ali


No comments

Powered by Blogger.