மண்ணெண்ணெய் தா - வீதியை மறித்து போராட்டம்
- Ismathul Rahuman -
மண்ணெண்ணெய் பெற்றுத்தருமாறு கோரி நீர்கொழும்பு மீனவர்கள் நீர்கொழும்பு கொழும்பு பிரதான வீதி தெல்வத்த சந்தியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர்.
செவ்வாய்கிழமை காலை நீர்கொழும்பு, கடற்கரை தெரு, பிடிப்பன ஆகிய பிரதேசத்திலுள்ள கத்தோலிக்க தேவஸ்தானங்கள் முன்பாக ஒன்று கூடய மீனவ சமூகத்தினர் அங்கிருந்து பேரனணியாக தெல்வத்தசந்தியை வந்தடைந்து அங்கு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீன்பிடித் தொழிலுக்கு தேவையான மண்ணெண்ணெயை பெற்றுத் தந்து எமது வாழும் உரிமையை உறுதிப்படுத்து., மசகு எண்ணெய் கொண்டு வருவதில்லை, கமிஷன் கிடைக்காததினாலா?, வட கிழக்கு மீனவர்களின் உரிமையை உறுதிப்படுத்து, எமக்குத் தேவையான மண்ணெண்ணெயை இருந்த விலைக்கே பெற்றுத்தா போன்ற சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்திநின்றனர்.
Post a Comment