Header Ads



கொலைச் சந்தேகநபருக்கு அடைக்கலம் வழங்கிய, அபே ஜனபல கட்சி தலைவர் கைது


'அபே ஜனபல' கட்சியின் தலைவர் சமன் பெரேரா கொஸ்கெட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


கடந்த ஜூன் 05 ஆம் திகதி குடாவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு அடைக்கலம் வழங்கிய சம்பவம் தொடர்பில் அவர் தங்காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


அபே ஜனபல கட்சிக்கு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த தேசியப் பட்டியல் எம்.பியாக அத்துரலிய ரத்தன தேரர் பதவி வகிக்கின்றார்.


இக்கட்சியிலேயே பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும் கடந்த தேர்தலில் போட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.