Header Ads



சிங்கப்பூரிலிருந்து கோட்டாபய தாய்லாந்து பறக்க, இலங்கை அரசாங்கம் பணம் செலுத்தியதா..?


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார். அவர் சிங்கப்பூரிலிருந்து பிரத்தியேக ஜெட் விமானம் மூலமே தாய்லாந்தின் பெங்கொக்கிற்கு சென்றுள்ளார் . 

இதற்கான பணம் இலங்கை அரசாங்கத்தினால் செலுத்தப்பட்டுள்ளதா ? என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய -16-  ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பினார் . 

அதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன , ஆம் , முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சட்டரீதியான சில சலுகைகள் உள்ளன .

 முன்னாள் ஜனாதிபதியும் அவரின் பின்னர் அவரது மனைவியும் ஜனாதிபதிக்குரிய வரப்பிரசாதங்களை பெற உரித்துடையவர்கள் . 

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மறைவுக்கு பின்னர் அவரது மனைவிக்கு அத்தகைய வரப்பிரசாதங்கள் தற்போது கிடைக்கப்பெறுவதாக அறிகிறேன் என்றார் . 

இதேவேளை , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது , இராஜதந்தி கடவுச்சீட்டை கொண்டுள்ளார் என்றும் , அதனால் அவர் தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கியிருக்கலாம் என்று தாய் வெளியுறவு அமைச்சர் டொன் பிரமுத்வினாய்அண்மையில் தெரிவித்திருந்தமைகுறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.