Header Ads



அநாவசியமாக முட்டைகளை சேகரித்தால், அரசுடைமையாக்கப்படுமென எச்சரிக்கை


உற்பத்தியாளர்களினால் அநாவசியமாக சேகரிக்கப்படும் முட்டைகளை அரசுடைமையாக்குவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 


முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். 


நேற்று முன்தினம்(19) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி  வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகும்.


கபில நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. இந்த நாட்டிலுள்ள நுகர்வோர்கள் இன்னும் மடையன்களாக இருப்பதன் காரணமாகத் தான் இந்த பொதுமக்களை நுகர்வோர்களை உரிஞ்சி வாழும் முட்டை உற்பத்தியாளர்களுக்கு நுகர்வோர்களாகிய நாம் தான் சரியான பாடத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். நாளையிலிருந்து வெறும் பத்து நாட்களுக்கு முட்டை வாங்குவதை பூரணமாக நிறுத்தினால் உறபத்தியாளர்களும் பண்ணையாளர்களும் நுகர்வோர்களின் காலில் விழுவார்கள் என்பது உறுதி. எனவே நாளையிலிருந்த பத்து நாட்களுக்கு முட்டையைப் பகிஷ்கரிப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.