Header Ads



இளம் விரிவுரையாளர் உயிரிழப்பு


- சேஹ்ன் செனவிரத்ன -


பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவுடன், மாவனெல்ல, உதுவம்கந்த பாறையிலில் ஏறிய போது, 300 அடி உயரமான பாறையில் இருந்து தவறி வீழ்ந்து பேராதனை பல்கலைக்கழக  விவசாய பீடத்தின் இளம் உதவி விரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


அல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த விரஸ்மி கொடிதுவக்கு என்ற 27 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பல்கலைக்கழக மாணவர்கள் 58 பேரைக் கொண்ட குழுவுடன் ஆய்வொன்றுக்காக உதுவம்கந்த பகுதிக்கு சென்றிருந்த அவர் இன்று (21) பிற்பகல் பாறையிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.


சடலம் தற்போது மாவனெல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

1 comment:

  1. இந்த இளம் விரிவுரையாளரின் அகால மரணத்துக்கு நாம் எமது இதயம் உருவிய அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இது போன்ற நிலைமைகள் ஆய்வுகளுக்காக வௌிக்களங்களுக்கு விஜயம் செய்யும் மாணவர்கள் மிகவும் கவனமாக நடநது கொள்ள வேண்டும். எந்த ஆய்வுகளிலும் அவர்களின் பாதுகாப்பு தான் முதல் கண் உறுதி செய்யப்படல் வேண்டும். இது போன்ற துயர் நிகழ்ச்சிகள் நடைபெறாது தவிர்ந்து கொள்ள அனைத்து மாணவர்களும் மிகவும் எச்சரிக்ைகயாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.