Header Ads



அடுத்துவரும் 6 மாதங்கள் ஒருபோதும் அனுபவித்திருக்காத, மிகக் கடினமான காலமாக இருக்கும் - ரணில்


இலங்கையில் அடுத்துவரும் 6 மாதங்கள் ஒருபோதும் அனுபவித்திருக்காத மிகவும் கடினமான காலப்பகுதியாக இருக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை வெளியிடும் நிகழ்வு இன்று கொழும்பில் நடைபெற்றபோது, அந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய நிலைமையில் சர்வதேச நாணய நிதியதத்துடன் தேவையான ஒப்பந்தங்களை செய்து இணக்கப்பாடுகளை எட்டிப் பயணிப்பதை தவிர மாற்று வழிகள் இருப்பதாக நான் கருதவில்லை.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.

எனினும், அடுத்து வரும் 6 மாதங்கள் கடினமானவை. அதனைக் கடந்தே ஆகவேண்டியுள்ளது. கடக்க முடியாது என்று திரும்பி வர முடியாத நிலைமையே காணப்படுகின்றது" என கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.