Header Ads



பாணின் விலையை 50 ரூபாவினாலும், பணிஸ் விலையை 25 ரூபாவினாலும் குறைக்க முடியும்


அரசாங்கம் தலையீடு செய்யுமாயின் பாண் ஒன்றுக்கான விலையை 50 ரூபாவாலும் , பணிஸ் ஒன்றின் விலையை 25 ரூபாவாலும் குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி  உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது . 

அதன் தலைவர் என்.கே ஜயவர்தன இன்று -22-  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார் .

பேக்கரி  தொழிற்துறையை தற்போது கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, கோதுமை மா உள்ளிட்ட மூலப்பொருட்களின் பாரிய விலை அதிகரிப்பு காரணமாக உற்பத்திகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.

 பாண் மற்றும் பணிஸ் என்பனவற்றை பொதுமக்கள் கொள்வனவு செய்ய முடியாத நிலை உள்ளது .  அரசாங்கம் மற்றும் அதனுடைய நிறுவனங்கள் உதவி வழங்குமாயின் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையினை குறைக்க முடியும் . 

இதனடிப்படையில் அரசாங்கம் தலையிடுமாயின் பாண் ஒன்றை 50 ரூபாவினாலும் ,  பணிஸ் ஒன்றை 25 ரூபாவினாலும் குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி  உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்தார் .

No comments

Powered by Blogger.