Header Ads



எனது தொலைபேசி 24 மணி நேரமும் ஒட்டு கேட்கப்படுகிறது, நீதி இல்லாத நாட்டிற்கு எதிர்காலம் இல்லை - டலஸ்


எனது தொலைபேசி 24 மணிநேரமும் ஒட்டு  கேட்கப்படுகிறது. இதற்கு யார் உத்தரவிட்டார்கள் என்பதை இனி வரும் காலங்களில் வெளிப்படுத்துவேன் என  நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். 

சிங்கள தொலைகாட்சி ஒன்றின் நேர்காணலில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

இந்த நாட்டில் ஒரு பெரிய மாற்றம் நிகழும் என்று இந்த மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். அந்த நம்பிக்கைக்கு உயிர் கொடுக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

ஆனால் நாட்டில் கடந்த செவ்வாய்க் கிழமைக்கு பின் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன், எனது தொலைபேசி 24 மணிநேரமும் ஒட்டுக் கேட்கப்படுகிறது. இதற்கு யார் உத்தரவிட்டார்கள் என்பதை இனி வரும் காலங்களில் வெளிப்படுத்துவேன். 

செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இருந்து என்ன நடக்கிறது என்பது நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

சர்வதேச நாணய நிதியத்தால் கூட அந்த பெரிய செயல்பாடுகளை கையாள முடியும் என்று நான் நினைக்கவில்லை. இதை வரலாறு பதிவு செய்யும்.

நீதி இல்லாத நாட்டிற்கு எதிர்காலம் இல்லை. இந்த நிலையை ஏற்படுத்தியவர்கள் மக்கள் அல்ல. அரசியல்வாதிகளே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

No comments

Powered by Blogger.