Header Ads



அலி சப்ரி ரஹீமின் சொத்துக்கள் மீதான, தாக்குதல் சந்தேக நபர் பிணையில் விடுதலை


 புத்தளம் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் வீட்டினதும், அலுவலகத்தின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் தீ  வைப்பு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில்  கைது செய்யப்பட்ட சமூக செயட்பாட்டாளர் இசாம் மரிக்கார்  இன்று -08- பிணையில்  விடுதலை செய்யப்பட்டார். 

கடந்த 2ஆம்  திகதி கட்டாரில் இருந்து  இலங்கை வந்த இவரை விமான நிலைய போலீசார் கைது செய்தனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட  அவர்  நீர்கொழும்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த  நிலையில்  இன்றைய  தினம் புத்தளம் மாஜிஸ்திரேட்  நீதிமன்றில்  ஆஜர் செய்யப்பபட்ட போது  தலா 10 லட்சம் வீதம் இரு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக சட்டத்தரணி நதீஹா அப்பாஸ் தெரிவித்தார். 

சந்தேக நபர் சார்பில்  சிரேஷ்ட சட்டத்தரணி  கமர்டீன்  தலைமையில் சட்டத்தரணிகலான நுஹுமான் நதீஹா அப்பாஸ், அசீம் ஆகியோர் ஆஜராகினர்.

No comments

Powered by Blogger.