Header Ads



பல்டி என்ற வதந்திகளை அடியோடு மறுக்கிறார் ஹர்ஷ


ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தான் புதிய அரசாங்கத்தினால் அமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக வெளிவந்த செய்திகளை மறுத்துள்ளார்.

கலாநிதி ஹர்ஷ டி சில்வா உத்தேச சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு முனைந்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்திக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் டி சில்வா, இந்த வதந்தியில் தம்மைப் பற்றிய குறிப்பை 100% மறுப்பதாக தெரிவித்தார். ஊகிக்கப்படும் நிலைப்பாடு தொடர்பில் அரசாங்கத்தின் எந்தவொரு உறுப்பினருடனும் தாம் கலந்துரையாடவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

"கோட்டாபய ஆர் எங்களை இந்த நெருக்கடியிலிருந்து #இலங்கையை மீட்டெடுக்க இடைக்கால அனைத்து (அல்லது பல) கட்சி அரசாங்கத்திற்காக நான் தொடர்ந்து வாதிட்டேன்," என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்குத் தேவையான மிகக் கடுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அனைத்துக் கட்சி அல்லது பல கட்சிகளைக் கொண்ட அரசாங்கம் இன்றியமையாதது என்பது தனது கருத்தாகும் என அவர் குறிப்பிட்டார்.

"அதற்கு, அனைத்துக் கட்சித் தலைவர்களும் 9-12 மாதங்களுக்கு அரசியலை நிறுத்திவிட்டு, நாங்கள் தயாரித்த குறைந்தபட்ச பொதுத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார். IBc

No comments

Powered by Blogger.