ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பயந்து தப்பியோடிய அமைச்சர்
மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அடுத்து அமைச்சர் ஒருவர் தான் கலந்து கொண்ட நிகழ்விலிருந்து அவ்விடத்தை விட்டு வெளியேறிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிற்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
திஸ்ஸமஹாராம பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் கலந்து கொண்டிருந்தார்.
நிகழ்வு நடைபெற்றவேளை பிரதேச செயலகம் முன்பாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆத்திரமடைந்த மக்கள் குழுவொன்று இன்று -18- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
இதனையடுத்து விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர பிரதேசத்தை விட்டு கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் வெளியேறியுள்ளார்.IB
Post a Comment