Header Ads



மஹிந்தவின் கண்களில் சோகத்தை, விரக்தியை கண்டேன் - அசைந்து, அசைந்து நடந்து வந்தார் - மனோ


 - Mano Ganesan Mp - 

“அன்று, இலகு ரயில் திட்டத்திற்காக, 1.4 பில்லியன் தர முன்வந்த ஜப்பான் நாட்டை நிராகரித்து, வரலாறு முழுக்க எமக்கு அதிக உதவிகள் செய்த ஜப்பானியர்களின் மனங்களை உடைத்து, இன்று, இலங்கையை கையேந்தி நிற்கும் பிச்சைக்கார நாடாக்கி விட்டார் இந்த ராஜபக்ச! இது ராஜபக்சவின் டிப்ளமடிக் க்ரைம்.” என்று நான் சிங்கள, ஆங்கில மொழியில் உரக்க சொல்லிக்கொண்டிருந்த போதுதான்..., “அவரது கெட்ட நேரம்” மஹிந்த ராஜபக்ச அசைந்து, அசைந்து நடந்து சபைக்குள்ளே வந்தார். 

வந்தமந்த போதே  நான் சொல்லிக்கொண்டிருந்ததை அவர் உணர்ந்தார். ஒருகணம் அவர் கண்களில் சோகத்தை, விரக்தியை நான் கண்டேன். 

அவரது மகன் நாமலும் சபையில் இருந்தார். நான் எப்போதும் ராஜபக்சர்களை சபையிலும், வெளியிலும் கடுமையாக விமர்சிபவன்.  

ஆனால், இப்படி ராஜபக்சவை நேரடியாக பெயர் சொல்லி விமர்சிக்க,  ஒரு வருடத்துக்கு முன்வரை, எதிரணி எம்பிக்களை, அவரது எம்பிக்கள் விடவே மாட்டார்கள். 

எதிரணிக்கு எதிராக கூச்சலிட்டபடி,  சபைக்குள் இறங்கி வந்து, வன்முறையில் இறங்குவார்கள். இன்று அந்த இடத்தில் அவர்கள் இல்லை.

No comments

Powered by Blogger.