பெற்றோல் கேட்டு இரவு வேளையில் வீதி மறியல் போராட்டம் (வீடியோ)
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியறிந்து அங்கு சென்ற பொதுமக்களுக்கும் பெற்றோல் உரிமையாளர் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வீதி மறியல் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் ஒன்று கூடிய மக்களை கலைப்பதற்காக சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மேற்குறித்த எரிபொருள் நிலைய உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் கோபமடைந்துள்ள மக்களே இவ்வாறு வீதி மறியல் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
பாறுக் ஷிஹான்
Post a Comment