Header Ads



தனது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்த்து அழுது புலம்பிய பிரசன்ன ரணதுங்க

 

உடுகம்பொல பிரதேசத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட தனது வீட்டை நேற்று பார்வையிட சென்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது குடும்பத்தினர் அழுது புலம்புவதை காணக் கூடியதாக இருந்தது.

வீடு தீ வைத்து எரிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு பின்னர் அமைச்சர் பிரசன்ன தனது குடும்பத்துடன் வீட்டை பார்வையிட சென்றிருந்தார்.

அத்துடன் இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், பௌத்த பிக்குகள் மற்றும் கத்தோலிக்க மத குருமாரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

நான் தானம் வழங்கும் பிக்குமார் கொலைகளை செய்வது குறித்து மேடைகளில் ஏறி பேசுகின்றனர். அத்துடன் கடந்த மே 9 ஆம் திகதி நடந்த வன்முறை சம்பவங்களுக்கு பௌத்த பிக்குமாரும், கத்தோலிக்க மதகுருமாருமே தலைமைத்துவத்தை வழங்கினர்.

இதனை நான் நாடாளுமன்றத்திலும் கூறினேன். வெளியில் வந்து தற்பேது மீண்டும் கூறுகிறேன், முடிந்தால், வழக்கு தாக்கல் செய்யுங்கள் என்று சவால் விடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Now only you could realize no? because the burnt house is yours no?? before yours lots of hundreds of innocents' have been burnt but you couldn't realize who were behind it ???

    ReplyDelete

Powered by Blogger.