Header Ads



நாட்டைவிட்டு வெளியேறும் பெரும் தொகை இலங்கையர்கள் - விமான நிலையமும் பரபரப்பு


கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையம் இந்த நாட்களில் பரபரப்பாக காணப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாரிய அளவிலான இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றமையே அதற்கு காரணமாகும்.

வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காகச் செல்பவர்களுக்கு அரசாங்கம் அதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அதற்கமைய, அதிகளவானோர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதுடன், மாணவர்கள் கல்வி கற்கச் வெளிநாடுகளை நோக்கி செல்லும் நடவடிக்கைகளும் இந்த நாட்களில் அதிகரித்துள்ளது.

மேலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை தங்கள் நாடுகளில் திரும்ப அழைப்பதன் காரணம் விமான நிலையம் பரபரப்பாக இயங்குவதாகவும் மக்கள் பாரிய அளவில் குவிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.