Header Ads



நாமல் மீது, சனத் ஜயசூரிய பாய்ச்சல்



வீரர்கள் பலமுறை தோல்வியடைந்து, அணியில் இருந்து நீக்கப்பட்டால், அணிக் கூட்டங்களுக்கு வந்து புதிய தலைவரை சங்கடப்படுத்துவதற்குப் பதிலாக வேறு விளையாட்டில் ஈடுபடும் கண்ணியம் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்று இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜனசூரிய தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து பிரிவு பிரதிநிதிகளுடன் சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் நாமல் எம்.பி கலந்து கொண்டிருந்த படத்தை, டுவிட்டரில் வெளியிட்டு கருத்து தெரிவித்த போதே சனத் ஜயசூரிய இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.