காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் ஜனாதிபதியின், பிறந்த தினத்திற்கெதிராக செய்த காரியம் (படங்கள்)
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை பதவி விலகுமாறு வலியுறுத்தி கோட்டாபய ராஜபக்சவின் பிறந்த நாளை கருப்பு தினமாக அனுஸ்டித்து காலிமுகத்திடல் போராட்டம் இன்று -20- மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று 74 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் தனது 73 ஆவது பிறந்த தினத்தையும் கொண்டாடியுள்ளார்.
இன்றைய தினத்தை கறுப்பு நாளாக அனுஸ்டித்து சற்றுமுன்னர் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டகாரர்களால் ஜனாதிபதியின் உருவ பொம்மை வடிவமைக்கப்பட்டு விண்ணதிரும் கோஷங்களுடன் சவப்பெட்டி ஊர்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
Post a Comment