Header Ads



விரட்டப்பட்டார் முஷர்ரப் - தேர்­தல்கள் ஆணைக்­குழு, பாரா­ளு­மன்ற செய­லாளருக்கு அறிவிப்பு


(ஏ.ஆர்.ஏ.பரீல்)

அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.எம்.முஷர்ரப் அக்­கட்­சியின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்தும் நீக்­கப்­பட்­டுள்ளார். இது தொடர்பில் தேர்­தல்கள் ஆணைக்­குழு, பாரா­ளு­மன்ற செய­லாளர் மற்றும் எஸ்.எம்.எம்.முஷர்­ரப்­புக்கும் கட்­சியின் செய­லா­ளரால் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எஸ்.எம்.எம்.முஷர்ரப் கட்­சியின் விதி­மு­றை­களை மீறி­ய­த­னாலும் கட்­சியின் முடி­வு­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்­ட­த­னாலும் கட்­சியின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்தும் பதவி நீக்கம் செய்­யப்­பட்­ட­தாக கட்­சியின் பொதுச் செய­லாளர் எஸ்.சுபைர்தீன் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

கட்சி முஷர்­ரப்­புக்கு எதி­ராக மேற்­கொண்ட ஒழுக்­காற்று நட­வ­டிக்­கை­யினை அடுத்து இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டது. கட்­சியின் உயர்­பீடம் விசா­ரணை குழு­வாக மாறி இரண்டு நாட்கள் மேற்­கொள்­ளப்­பட்ட பூர­ண­ வி­சா­ர­ணை­யை­ய­டுத்தே அவர் கட்­சியின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்தும் நீக்­கப்­பட்­டுள்ளார்.

இது தொடர்பாக அவருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் எஸ்.சுபைர்தீன் தெரிவித்தார்.– Vidivelli

No comments

Powered by Blogger.