ஊடகப் பேச்சாளராக மாறியுள்ள ரணில் , ராஜபக்சாக்களை பாதுகாப்பது ஒன்றையே செய்ய முடியும்
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் ஊடகப் பேச்சாளராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தெரிவித்துள்ளது.
நெருக்கடி நிலை தொடர்பில் நாட்டு மக்களுக்கு நாளாந்தம் ஊடக அறிக்கைகளை வெளியிட்டு அவர் சிறப்பாக செயற்பட்டு வருவதாக கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (17) தெரிவித்துள்ளார்.
பிரதமர் தாம் நினைப்பது போல் மந்திரவாதி அல்ல என்றும், ராஜபக்சாக்களை பாதுகாப்பது ஒன்றே அவரால் செய்ய முடியும் எனவும் திஸாநாயக்க மேலும் தெரிவித்தார். ib
Post a Comment