Header Ads



ஜனாதிபதியினால் பணயக் கைதியாக, பிடிக்கப்பட்ட ரணில் - ஹக்கீம் எச்சரிக்கை (Video)


- A.R.A HAFEEZ -

ஜனாதிபதி, இந்த இக்கட்டான காலச் சூழலைத் தாண்டுவதற்குப் புதிய பிரதமரை பணயக் கைதியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பாங்கில் செயற்படுகின்ற அரசியல் நடவடிக்கையையே தற்பொழுது காண்கின்றோம் எனக் குறிப்பிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்,19ஆவது சீர்திருத்தத்தின் உண்மையான  உள்ளடக்கங்களை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து இன்னும் ஆட்சியில் நீடித்து கொள்வதற்கான கபடத்தனமான இந்த ஆட்சிக்குப் புதிய பிரதமரும் இணங்கிப் போவாராக இருந்தால்  அவரது நிலைமையும் விபரீதமானதாக ஆகிவிடும் என்றும் எச்சரித்தார்.

நாகவில்லு(எருக்கலம்பிட்டி)ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவும்,இளைஞர் காங்கிரஸும் இணைந்து,புத்தளம் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (5),  நடாத்திய கட்சியின்  விசேட ஒன்றுகூடல் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய பின்னர் , ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு,முன்னாள் வன்னி மாவட்ட. பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த நூர்தீன் மஷுர் நினைவுகூரப்பட்டதோடு,விசேட துஆ பிரார்த்தனையும் நடைபெற்றது.bமுஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்ததாவது,


No comments

Powered by Blogger.