Header Ads



வர்த்தமானியில் வெளியாகவுள்ள 22


- Ismathul Rahuman -

   22 வது திருத்தச் சட்டத்தை திங்கட்கிழமை வர்த்தமானியில் வெளியிடவுள்ளோம்.  நாட்டை பாதுகாக்கவே இச்சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது என நீதி,சிறைச்சிலைகள், அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நீர்கொழும்பு, தழுபொத்த இளம் வாலிபர் குற்றவாளிகள் சீர்திருத்த திறந்த வெளி சிறைச்சாலையில் விவசாய பயிர்செய்கைகளை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது கூறினார்.

   நீதி அமைைச்சர் விஜயதாஸ ராஜபஷ அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்  அரசு முன்வைத்துள்ள 22 வது திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. சட்டமா அதிபருக்கு அனுப்பி அவரது உறுதிப்படுத்தல் கிடைத்த பின் திங்கட்கிழமை வர்த்தமானியில் வெளியிட தீர்மாணித்துள்ளோம். அதன் பின்னர் ஒரு கிழமையில் பாரளுமன்றத்தில் சமர்பிக்கப்படும். பாரளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பின்னர்   ஒரு கிழமைக்குள் உச்ச நீதிமன்றில் அதனை சவாலுக்கு உட்படுத்த பொது மக்களுக்கு சந்தர்பம் கிடைக்கின்றன. 

  கடந்த காலங்களில் விதிக்கப்பட்ட வரிமுறைகள் நாட்டுக்கு உகந்ததல்ல. கூடுதலான வருமானங்களை ஈட்டுபவர்களிடமிருந்து கூடுதலான வரி அறவிடும் முறை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.