Header Ads



15 லட்சம் ரூபாவை லஞ்சமாக பெற முயற்சித்த வியாழேந்திரனின் சகோதரர் கைது


பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் சகோதரர், காணி விவகாரம் ஒன்று தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் நேற்று அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காணி ஒன்று தொடர்பில் 15 லட்சம் ரூபாவை லஞ்சமாக பெற முயற்சித்த குற்றச்சாட்டில், மட்டக்களப்பில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது உத்தியோகத்தர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

No comments

Powered by Blogger.