Header Ads



பின் வாங்கினார் மத்திய வங்கி ஆளுநர்


பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் ஸ்திரத்தன்மையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய வங்கியின் தலைவராக நீடிப்பதாகவும், தான் முன்னர் கூறியது போன்று பதவி விலகப் போவதில்லை எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் கடனை மறுசீரமைப்பதற்கான திட்டங்களை இலங்கை மத்திய வங்கி இறுதி செய்துள்ளதாகவும், விரைவில் அமைச்சரவையில் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மத்திய வங்கி எடுக்கும் எந்த நடவடிக்கையும் வெற்றியடையாது என்பதால், அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படாவிட்டால் பதவி விலகுவேன் என கலாநிதி நந்தலால் வீரசிங்க கடந்த 11ம் திகதி அறிவித்திருந்தார்.


No comments

Powered by Blogger.