Header Ads



பல்டி அடிக்கமாட்டேன் என்கிறார் மயந்த திஸாநாயக்க


தாம் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க,தெளிவுபடுத்தலொன்றை விடுத்துள்ளார்.

இதன்படி தான் அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இணைவதற்கான அழைப்பிதழ் கிடைத்துள்ளதாக அவர் முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். வாய்ப்பு கிடைத்தால் நாட்டுக்கு சேவை செய்ய தயாராக உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையிலேயே தான் அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.