Header Ads



எரிபொருள் தட்டுப்பாடு, நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டன - நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்


நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களின் நீண்ட வரிசையில் காணப்படுகின்றன.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நேற்றிரவு முதல் மூடப்பட்டுள்ளதுடன், மாலையில் இருந்து மக்கள் வரிசையில் நின்று அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அத்துடன், நாட்டின் பல பகுதிகளிலும் பெற்றோல்/டீசல் மற்றும் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.