Header Ads



கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்த மருத்துவ மாணவர்கள் மீது தாக்குதல் - நவீன கருவிகளுடடன் பொலிஸார் ஒடுக்குமுறை


கொழும்பு - யோர்க் வீதியில் மருத்துவ மாணவர்கள் மேற்கொள்ளும் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து கண்ணீர்ப் புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.  

அரசாங்கத்திற்கு எதிராக மருத்துவ மாணவர்கள்  முன்னெடுத்த ஆர்ப்பாட்ட பேரணி தீவிரமடைந்ததை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

அரசாங்கத்திற்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.   

அத்துடன்,  கொழும்பு காலி முகத்திடல் கோட்டா கோ கம பகுதியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 50 நாட்களையும் தாண்டி நடத்தப்பட்டு வருகின்றது. 

இவ்வாறான நிலையில் இன்றும் அரசாங்கத்திற்கு  எதிராக மருத்துவ மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து களத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த நீர்த்தாரகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

காலிமுகத் திடல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்கள் நிறைவடைந்த நேற்று  சனிக்கிழமையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.