Header Ads



கௌரவமாக ஓய்வுபெற பிரதமருக்கு கிடைத்துள்ள, சந்தர்ப்பத்தை காகங்களின் கூட்டம் தடுத்து வருகிறது


கௌரவமாக பதவியில் இருந்து விலகி ஓய்வுபெறுவதற்காக பிரதமருக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள காகங்களின் கூட்டம் தடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்ச ஆதரவாளர்கள் கடும் அழுத்தங்களை கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தின் போது பிரதமரை பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்ததாக தகவல்கள் வெளியானது.

எனினும் பிரதமர் ஊடக செயலாளர் அப்படியான கோரிக்கை விடுப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில்  உதய கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.