Header Ads



பொலிஸ் தலைமையகத்துக்கு முன் பதற்றம் - குண்டர்களை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம்


கடந்த 09ஆம் திகதியன்று காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்னால் இடம்பெற்ற வன்முறைகளுக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி சோசலிச வாலிபர் சங்கம் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை  காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, தாக்குதல் நடத்தியவர்கள் மாத்திரம் இதுவரை கைது செய்யப்படாமை கண்டனத்திற்குரிய விடயமாகும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் நிறைவேற்று குழுவின் உறுப்பினர் சட்டத்தரணி நுவன் போபகே இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக நேற்றைய தினம் வரையில் 230பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.