Header Ads



6 ஆவது முறையாக, ரணில் பிரதமராக பதவியேற்றார்


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இன்று (12) பிற்பகல், கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

ரணில் விக்ரமசிங்க அவர்கள், இதற்கு முன்னர் ஐந்து முறை பிரதமராகப் பதவி வகித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், மைத்திரி விக்ரமசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

12.05.2022


No comments

Powered by Blogger.