Header Ads



அமைச்சர்கள், ஹரீன் மனுச ஆகியோருடன் இணைந்து பணியாற்றத் தயார் - நாமல்


ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் அமைச்சுப் பதவிகளை ஏற்று அரசாங்கத்தில் இணைவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டமையை முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபகச வரவேற்றுள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்தும் தெரிவித்திருப்பதாவது, 

ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய இருவரும் இந்த இக்கட்டான காலங்களில் நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்வதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்தமை பாராட்டத்தக்கது எனவும்  தெரிவித்துள்ளார்.

மேலும் இருவரும் எப்போதும் முரண்பாடான அரசியல் கருத்துக்களைக் கொண்டிருப்பதாகவும், அது எதிர்காலத்திலும் தொடரும் என தான் நம்புவதாகவும் நாமல் ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

அதேவேளை அரசியல் மாற்றத்திற்காக அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.