Header Ads



பிரதமராக பதவியேற்கத் தயாரென்றார் சஜித், நிராகரித்தார் ஜனாதிபதி, ரணில் பிரதமர் ஆகிறார் - நாளை புதிய அமைச்சரவை


ஜனாதிபதி தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டதற்கு இணங்க கலந்துரையாடலின் அடிப்படையிலும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தான் பிரதமராக பதவியேற்கத் தயாரென அதில் இன்று(12)  குறிப்பிட்டிருந்தார்

எனினும் அனுப்பப்பட்ட கோரிக்கை கடிதத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென எதிர்கட்சித் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரணில் விக்ரமசிங்க இன்று (12) மாலை புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வாரென தகவல்கள்  கூறுகின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதை அடுத்தே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போதுஇ ​​பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளதாக அறியமுடிகிறது.

ரணில் விக்கிரமசிங்க புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.

அத்துடன் புதிய அமைச்சரவை நாளைய தினம் (13)  பதவியேற்கவுள்ளதாகவும்  தகவல்கள் எனினும் இத்தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. 

No comments

Powered by Blogger.