Header Ads



பிரதமர் பதவி தொடர்பில் நீங்கள் எடுக்கும், எந்த தீர்மானத்தையும் ஏற்கத் தயார் - இன்று தம்பிக்கு அறிவித்தார் அண்ணன்


பிரதமர் பதவி தொடர்பில் தாம் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது நிலைப்பாட்டை இன்று (01) காலை ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நியூஸ்வயருக்கு தெரிவித்தார்.

சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இராஜினாமா செய்யுமாறு கோரிய மகாநாயக்க தேரர்களின் பிரேரணையை உடனடியாக அமுல்படுத்துமாறு பௌத்த பிக்குகள் குழு நேற்று ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.


No comments

Powered by Blogger.