Header Ads



எரிபொருள் பெறுவதில் வாழ்வா, சாவா என்ற நிலையில் மக்கள் - கிண்ணியாவில் பதற்றம்


- ஹஸ்பர் -

திருகோணமலை கிண்ணியா எரிபொருள் நிலையத்தில் இன்று (21) மாலை பெற்றோல் வருகையினை அடுத்து விநியோகம் இடம் பெற்றது. மிக நீண்ட வரிசையில் பெற்றோலினை பெறுவதற்காக மக்கள் காத்திருந்தனர். 

அதிகமான சன நெறிசல் காரணமாக பெற்றோல் விநியோகம் இடம் பெற்ற நிலையில் விநியோக இடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டதால் நிலைமை மோசமாக மாறியது. 

கிண்ணியா மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே இந்த நிலை ஏற்பட்டதுடன் பொலிசார்  பாதுகாப்பு கடமையில் இருந்தனர். 

ஒரு சில மணி நேரம் மின்சாரமும் துண்டிக்கப்பட்ட நிலையிலும் கூட பெற்றோல் விநியோகம் இடம் பெற்றது. முச்சக்கர வண்டி மோட்டார் சைக்கிள் என வெவ்வேறான நீண்ட வரிசை காணப்பட்டது. சுமூகமான நிலையின்மை ஏற்பட்டதால் விநியோக நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டு பல இன்னல்களுக்கு மத்தியில் விநியோகம் இடம் பெற்றது.

பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு நிலை தொடர்ச்சியாக இவ்வாறு காணப்படுமானால் வாழ்வா சாவா என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்படலாம். 

No comments

Powered by Blogger.