Header Ads



நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்தபின் அவர் விரும்பும் இடத்திற்கு, மஹிந்த ராஜபக்‌ஷவை பாதுகாப்பாக அனுப்பி வைப்போம்


முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ திருகோணமலை கடற்படை கப்பல்துறை தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கமல் குணரத்ன இதனை தெரிவித்தார்.

நாட்டில் தற்போதுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் இவ்வாறு வைக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்ததன் பின்னர், தாம் விரும்பும் இடத்திற்கு அவர் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார் என, கமல் குணரத்ன இதன்போது தெரிவித்தார்.

பொதுச் சொத்துக்களைக் கொள்ளையப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  நாட்டை நேசிக்கும் இலங்கைப் பிரஜைகள் என்ற ரீதியில் அவர்களது சகஜ வாழ்க்கை நிலைக்கு தடை ஏற்படாத வகையில் அமைதியை முன்னெடுப்பது மிக முக்கியமாகும் என்று  பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன 

No comments

Powered by Blogger.