Header Ads



என்னையும், குடும்பத்தையும் இந்தியாவுக்கு அழைத்து பாதுகாப்பு தருக - மோடியிடம் இலங்கை கோரிக்கை


இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையான பாதுகாப்பு இதுவரையிலும் வழங்கப்படவில்லை என்பதால், தன்னையும் தன்னுடைய குடும்பத்தினரையும் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று, பாதுகாப்பு வழங்குமாறு இந்தியப் பிரதமர் ​ந​ரேந்திர மோடியிடம், இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான விமலவீர திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு தொடர்பில், தான் திருப்தி அடையவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மே 9 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் ஆளும் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 75 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளும் சொத்துக்களும் சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.