Header Ads



மிகக்குறுகிய காலத்துக்கு நாட்டின் பிரதமராகத் தயார் என்கிறார் கரு ஜெயசூரிய - மேலும் 4 பேரின் பெயர்களும் சிபார்சு


 முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் பெயர் புதிய பிரதமராவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அனைவரும் இணங்கினால் சிறந்த செயல் திட்டத்துடன் மிகக்குறுகிய காலத்துக்கு நாட்டின் பிரதமராகத் தயார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

கருத்துத் தெரிவித்த கரு ஜயசூரிய,

சகல தரப்பும் உடன்படுவதாக இருந்தால், சிறந்த செயல் திட்டத்துடன் மிகக்குறுகிய காலத்துக்கு நாட்டின் பிரதமராகத் தயார் என கூறினார். 

அத்துடன் கருவுக்காக (மாமனார்) ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்கா தனது பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நாட்டில்  நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில்  சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்குமாறு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன.

 பிரதமர் பதவியை ஏற்குமாறு ரணில் விக்கிரமசிங்க, டளஸ் அழகப்பெரும, மைத்திரிபால சிறிசேன, நிமல்சிறிபால டிசில்வா ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 

1 comment:

Powered by Blogger.