Header Ads



சஜித்துடன் 4 முஸ்லிம் Mp க்கள் சந்திப்பு


- Anzir -

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுடன் 4 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சனிக்கிழமை, 14 ஆம் திகதி சந்திப்பொன்றில் பங்கேற்றுள்ளனர்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ், இசாக் ரஹ்மான், பைசல் காசிம் மற்றும் தௌபீக் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

சமகால அரசியல் நிலவரம், சமூகத் தேவைகள், புதிய பிரதமர் நியமனம், புதிய பிரதி சபாநாயகர் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் பற்றி இச்சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமக்கான ஆதரவை முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் நாடியுள்ள நிலையில் சஜித் பிரேமதாசவுடன் 4  முஸ்லிம் அரசியல்வாதிகளும் சந்தித்தமை முக்கிய விடயமாக கருதப்படுப்படுகிறது-

1 comment:

  1. பொந்துவை ஒட்டியிருந்த முஸ்லிம் அரசியல் பாம்புகள் இந்தப் பேரழிவிலிருந்து என்ன கிடைக்கும் என்று வெளியே வரத் தொடங்கியுள்ளன. முஸ்லிம்களின் அரசியல் வாக்கு வங்கிகளத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக முஸ்லிம்கள் பாராளுமன்றத்திற்கு அருகில் "முஸ்லிம் எம்.பிகளை விரட்டியடிப்போம்" என்ற அமைப்பை நிறுவி போராட்டம் நடத்தியிருக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்.
    இப்போது எம்.பி.,க்கள் ஆக்கிய முஸ்லிம் வாக்குகளை வைத்து அவர்கள் எப்படி "மீண்டும் அரசியல் வியாபாரத்தை" இந்த முனாஃபிக்குகள் தொடங்கியுள்ளனர் என்று பாருங்கள்.
    தமக்கான சிறந்த "டீல்" தேடி, எம்பி ஆவதற்கு காரணமான முஸ்லிம்களின் தாழ்மையான வாக்குகளை வியாபாரம் செய்வதற்காக ரணிலையும் கோட்டாவையும் மகிந்தவையும் கூட அவர்கள் சந்திக்கத் தவற மாட்டார்கள்.
    இவர்களைத்தான் முஸ்லிம் சமூகம் இப்போது ஒழிக்க முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது இன்ஷா அல்லாஹ். இந்த அரசியல்வாதிகள்
    "முஸ்லிம் எம்.பி.யிகளை/இந்த அரசியல்வாதிகளை விரட்டியடி" கமாவை நாடாளுமன்றம் அருகே முஸ்லிம் இளைஞர்கள் அமைக்க வேண்டும். அதிருப்தியில் உள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இந்த "காமா"வில் சேர்ந்து ஆதரவளிப்பார்கள். இன்ஷா அல்லாஹ், இலங்கையின் அரசியல் உயர்பீடத்தில் மாற்றங்களை முஸ்லிம்களும் விரும்புகிறார்கள் என்ற வலுவான செய்தியை அது அனுப்பும்.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.