Header Ads



கடற்கரையில் பெருநாள் - 3 வருடங்களின் பின் திரண்ட மக்கள், காலை வேளையில் அற்புதக் காட்சி (வீடியோ)


- பாறுக் ஷிஹான் -

புனித நோன்புப் பெருநாள் தொழுகை அக்பர் ஜும்மா மஸ்ஜீத் ஏற்பாட்டில்  3 வருடங்களுக்கு பின்னர் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் செவ்வாய்க்கிழமை (3) காலை 6.15 மணிக்கு நடைபெற்றது. இதன் போது  கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

3 வருடங்களுக்கு பின்னர் மேற்படி பகுதிகளில் இடம்பெற்ற பெருநாள் தொழுகைகளில் பல்லாயிரக்கணக்காகன மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின் அனைவரும் தமது  நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொண்டனர் . 

No comments

Powered by Blogger.