Header Ads



புதிய அரசு பதவியேற்று 2 வாரங்கள் கடந்த போதிலும், உறுதியான எதுவும் இடம்பெறவில்லை


 அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை இரத்துச் செய்ய வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

Facebook பதிவொன்றிலே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

20ஆவது திருத்தத்தை நீக்குவது அரசின் நேர்மைத் தன்மையை அறிந்துகொள்ளப் பயன்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசை மேலும் கடுமையாகச் சாடியுள்ள அவர், புதிய அரசு பதவியேற்று இரண்டு வாரங்கள் கடந்த போதிலும் உறுதியான எதுவும் இடம்பெறவில்லை என்பது கவலையளிக்கின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

"எங்கள் மக்கள் இன்னும் வரிசையில் நிற்கின்றார்கள். அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், தயவு செய்து மக்களின் துன்பங்களை மறந்துவிடாதீர்கள்" எனறு சனத் ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.