Header Ads



இன்றிரவு காலிமுகத்திடலுக்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்ட 12 பேர் - ஆர்ப்பாட்டக்காரர்களினால் அமோக வரவேற்பு


நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டவர்கள் இன்றிரவு (04) காலிமுகத்திடல் போராட்ட பகுதிக்கு வாகன ஊர்வலமாக அழைத்துவரப்பட்டுள்ளனர்.

பொல்துவ சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், ஆண்கள் என 12 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இவர்கள் அரசுக்கு எதிராக காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்ட பகுதிக்கு வாகன ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு  வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.