Header Ads



அலரி மாளிகைக்கு முன், நடந்தது என்ன...?


பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு வெளியே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களில் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்  தாக்கியதை அடுத்தே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றில் பலகையை ஆர்ப்பாட்டக்காரர் வைக்க முயற்சித்த போதே, பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் தாக்கவில்லை- பொலிஸ் பேச்சாளர்

அலரி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபரை பொலிஸார் தாக்கவில்லை என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் பொலிஸார் தற்பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை பொலிஸார் தாக்கியமை தொடர்பில் ஊடகமொன்று கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொலிஸார் தங்கள் கடமைகளை செய்வதை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



No comments

Powered by Blogger.